ஒரு ராத்திரியில் தன் வாழ்க்கை தலைகீழாக மாறப் போகிறது என்பதை அறியாதவளாக, சான்பிரான்ஸிஸ் கோவில் கோல்டன் கேட் பாலத்தைத் தாண்டிக் காரை ஓட்டிக் கொண்டிருந்தாள் பேஜ். பாலத்தின் கீழே ஓடும் தண்ணீர் பார்க்கப் பார்க்கப் பிரமிப்புக் கொடுத்தது. அது ஒரு இனிமையான மாலை நேரம்.