இக்கதைக் கருவில் மரணம், வாழ்க்கை, மரணத்தின் தரிசனம், துக்கம், மோகம், அகங்காரம், சத்தியம், கடவுள் என்ற பல தத்துவங்களும் ஆழமாக அலசப்பட்டுள்ளன.
நம்பிக்கை, அவநம்பிக்கை என்ற பரஸ்பர முரணான கருத்துக்கள், மரணத்தின் தரிசனத்தின் முன், விதியின் முன் எவ்வாறு செயலாற்றுப் போகின்றன என்பதைப் பார்க்கிறோம். நம் வாழ்க்கை முழுவதுமே விதி ஊடுருவி நிற்கிறதோ, அதன் முன் நாம் வலிமையற்று விடுகிறோமோ என்ற கேள்வியும் நம் மனத்தில் எழாமலில்லை.