ஆணுருவில் இருக்கும் தனக்குள் மாறுபட்ட பால்நிலைகள் இயங்குவதை உணரும் மூக்குத்திகாசி அந்த நிலைமாற்றங்களுக்கு தன்னை முழுமையாக ஒப்புக் கொடுப்பவராகிறார். அதன் பொருட்டான மகிழ்வையும் இடர்ப்பாடுகளையும் ஒன்றேபோல் எதிர்கொள்ளும் அவர் ஒரு மாற்று பாலினத்தவரை இயல்பாக ஏற்பதில் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் மனத்தடைகளை கேள்விக்குள்ளாக்குகிறார்.