மக்களாகிய நாம் நம்முடைய கோரிக்கைகளைக் கேட்பதில் தவறில்லை அதற்காக வன்முறையைத் தூண்டும் விதமாக கடைகளை அடைப்பது பஸ் எரிப்பது போன்று வன்முறையில் ஈடுபடக் கூடாது. எதிர்ப்பைக் காட்ட வேண்டுமென்றால் பந்த் மட்டும் தீர்வாகாது. அறவழியில் உங்கள் அன்றாட வேலைகளைச் செய்துக் கொண்டே உங்கள் எதிர்ப்பையும் காட்டுங்களேன். ஒரு நிறுவனத்தின் செயல் உங்களுக்குப் பிடிக்கவி்ல்லையென்றால் கருப்புக் கொடி அணிந்து உங்கள் எதிர்ப்பைக் காட்டுங்க அதை விடுத்து ஸ்டிரைக் செய்ய வேண்டாமே. காந்தியடிகளின் அறவழியைப் பின்பற்றுங்கள்.