பகல் முழுவதும் வீதியை உலா வந்துவிட்ட களைப்போடு இரவின் சகோதரியான அந்திமாலை பொழுதிற்கு வணக்கம் செய்து வழிவிட்டு தன் கூடு தேடி சென்ற சூரியனிற்கு விடைகொடுத்த மாலை கதிர்களும் பொன்மஞ்சள் நிறம் தரித்து மேகங்களை மின்ன செய்து கொண்டிருந்தது. அந்த அழகிய ரெசார்ட் விட்டு வெளியே வந்த அதிரூபன் ஆறடிக்கும் சற்றே அதிகமான உயரத்துடன் ஸ்டைலிஷ் லுக்கோடு பார்ப்பவரின் மனதை கவரும் விதமான அழகன். "தேங்க்ஸ் மச்சி, நீ வந்தது எனக்கு அவ்வளோ சந்தோஷம்..." தன் நண்பனை அணைத்து விடுவித்த ப்ரனேஷின் தோளில் தட்டிய அதிரூபன்,