தன் கண்முன்னே கோபத்துடன் நின்று எப்பொழுதும் போல் அவனைத் திட்டிக் கொண்டிருந்த தங்கை 'சௌம்யா' வை பாசத்துடனும், புன்னகையுடனும் பார்த்திருந்தாள் 'நிவேதா.' தங்கையின் பிஎஸ்சி இரண்டாமாண்டில் ஆரம்பித்த புலம்பல்கள் இன்னும் நின்றபாடில்லை. தங்கை பேசப்பேச நினைவுகள் அன்றைய தினத்திற்கு பயணித்தது.