தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான சிறுதெய்வக் கோயில்கள் இருக்கின்றன. சிறுதெய்வங்கள் இல்லாத கிராமங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவை பரவலாக அமைந்திருக்கின்றன. குறிப்பிட்ட சில சமூகங்களைத் தவிர பிற அனைத்து சமூகங்களிலும் சிறுதெய்வ வழிபாட்டு முறையும், அவற்றுக்கு விலங்குகளைப் பலியிடும் சடங்கும் உள்ளது. இதற்கான அடையாளமாக, அக்கோயில்களில் சிறிய பலிபீடங்கள் இருக்கின்றன. ஆனால், மனிதருக்கு மனிதர் வாழ்க்கை முறையும், உணவு முறையும் மாறுபடுவதைப் போல இந்தச் சிறு தெய்வங்களுக்கான பலி முறையிலும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. பொதுவாக மனிதர்கள் தாங்கள் ஆசை யாய் வீட்டில் வளர்க்கும் மிருகங்களைத் தான் சாமிகளுக்கு நேர்ந்து பலி கொடுக் கின்றனர். அதிலும், ஆண் விலங்குகளைப் பலியிடுவதே வழக்கம். ஆட்டுக்கிடா, எருமைக்கிடா, சேவல், ஆண் பன்றிகளே பொதுவாகப் பலியிடப்படுகின்றன. எந்தக் கோயிலிலும் பசு மாடோ, காளை மாடோ பலியிடப்படுவதில்லை.