அன்றிலிருந்து குழந்தைகளுடன் மட்டுமல்ல; அவர்களின் குடும்பத்தினருடனும் இரண்டறக் கலந்துவிட்டார் மனிதர். ‘‘பகவான் சார் வந்த பிறகுதான் எங்க குழந்தைங்க இங்கிலீஷ்ல நல்ல மார்க் எடுக்க ஆரம்பிச்சாங்க. முன்னாடியெல்லாம் இங்கிலீஷ் படிக்க ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. அவரை எதுக்காக டிரான்ஸ்ஃபர் பண்றாங்கனு தெரியல...’’ என உணர்வுபூர்வமாக ஆரம்பித்தார் வெளியகரம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி. ‘‘பாடத்தை பசங்களோட பசங்களா இருந்து சொல்லித் தர்ற மனிதர். அதனால அவர்மேல பசங்களுக்கு ரொம்ப பிரியம்.