இந்த பிரம்மாண்டமான நூல் விஞ்ஞானத்தமிழ் உலகத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் நிகழ்வு. மூளை என்ற வியப்பூட்டும். பிரமிக்கவைக்கும் உலகத்திற்குக் கரம் பற்றி நம்மை நடைபழக்கும் இனிய சுற்றுலா. விஷய அடர்த்தி சிந்தனைச் செறிவு, புகைமுட்ட ' உலகிற்குத் தெளிவு நல்கும் சால்பு. விஞ்ஞானத்தைச் சுவையுடன் குழைத்துத் தாயினும் சாலப் பரிந்து ஊட்டும் சிறப்பு. விஞ்ஞானத்தை வாழ்வியலுடன் இணைத்து நம் ஆளுமைக்கு வளமூட்டும் பாங்கு, இந்தக் . காரணிகள் வாசிப்பு அனுபவத்திற்குச் செழுமையையும், சுவையையும், வாழ்வியல் பயன்பாட்டையும் நல்கியுள்ளன. நம் கையைப் பரிவுடன் பற்றிக்கொண்டு, நமக்குப் பல அதிசயங்களைக் காண்பித்துக் கொண்டும், வழிநடத்தியும் உடன்வருகிறார் ஆசிரியர்.. மனித மூளையின் பற்பல விகசிப்புகளை இனங்காட்டுகிறார். நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார். விஞ்ஞானத் தமிழ் இலக்கியத்தில் இந்த நூல் ஒரு குறிப்பிடத்தக்க வரவு.