வாரிசுகளால் வாழாமல் வாசிப்பவர்களால் வாழ்பவர்களே எழுத்தாளர்கள். அவர்கள் வாசிக்கும் இதயங்களால் மரணமில்லாப் பெருவாழ்வை வாழ்கிறார்கள்.தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கான பொற்காலம் ஒன்று இருந்தது 1980கள் வரை அது நீடித்தது. புதிதாக எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும். வாசிப்பே வளமான பொழுதுபோக்காக இருந்ததாலும் புத்தகங்களைபெ படிப்பதே இனிய அனுபவமாக பலருக்கும் இருந்தது.