புதுமைக்குள் புகுந்து புகழ் படைக்கும் கவிஞர் புவியரசு இந்நூலை மக்கள் கவிஞன் மாயகோவ்ஸ்கிக்குப் படையலாக்குகிறார். கவிதைகளின் கடிவானச் சொற்கள் ஒரு தீர்க்கத்தைத் தீர்மானிக்கின்றன. மேலே மேலே பறந்து காட்சிகளை உண்டபின் புனைந்து காட்டுகிறார். இதுதான் என்ற ஒரு நிரந்தரமான விடியலை உருவாக்குகிறார். நெருப்பாற்றில் நீராட நெஞ்சாற்றலோடு அழைக்கிறார். உழைக்கும் கரங்களால் ஊழல்களைத் தகனம் செய்யக் கனல்பொறி கிளப்புகிறார். நூலுக்குள் புகுந்தால் புதுப்புது அர்த்தங்கள் புலப்படும். சமுதாயத் துக்கு தன்மை செய்யவேண்டும் என்ற மனித்த் தவிப்பை ஏற்படுத்தி, அந்தத் தவிப்பை அடக்க இரைபோடத்தூண்டும். இனி இந்நூல் உங்கள் சிந்தனைக்கு