நவீன முதலாளித்துவம் பெண் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாகவே வைத்திருக்க
விரும்புகிறது. சமூகத்தளத்தில் போராடி முன்னுக்கு வர அவர்களுக்குத் தளம்
இயல்பாகக் கிடைக்கிறதா என்றால் சிரமம்தான். முதல் புள்ளியிருந்தே அவள்
மீண்டும் மீண்டும் செயல்படவேண்டியிருக்கிறது அல்லது அங்கேயே முடங்கிவிட
வேண்டியிருக்கிறது. பட்டாம்பூச்சியாக முயலாமல் கம்பளிப்பூச்சிகளாக முடங்கிற
பெண் தொழிலாளிகளில் ஒரு பாத்திரத்தை மையமாகக் கொண்டு இந்நாவல் பெண்
தொழிலாளிகளியின் அவ்வகை மாதிரி வாழ்க்கையை முன்வைக்கிறது.