அனுபவங்களே படைப்பின் ஊற்றுக்கண். கலை நோக்கு அந்த ஊற்றுக்கண்ணைக் கீறிவிடும் கருவி. ஒரு படைப்பு தீவிரமாக வாசிக்ககப்படும்போது புதிய அனுபவங்களை வழங்குவதுபோலவே படைப்பூக்கத்துடன் எதிர்கொள்ளப்படும் ஒரு அனுபவம் புதிய தரிசனங்களையும் புதிய படைப்புகளுக்கான விதைகளையும் வழங்குகிறது. படைப்பாளியாகவும் விமர்சகராகவும் செயல்பட்டுவரும் பாவண்ணன் தன் அனுபவங்களைப் படைப்பூக்கத்துடன் எதிர்கொண்டதன் தடயங்களை இந்த நூலில் காணலாம்.