இந்நூலில் அறிவியல் முறையில் நன்கு ஆய்ந்து அனுபவித்த 12 மூலிகை வகைகளையும், 12 கீரை வகைகளையும், 15 காய்கறி வகைகளையும், 3 தானிய வகைகளையும், 3 மலர் வகைகளையும் குறித்து அதன் சூப் தயாரிப்பு முறைகளையும், அதனால் விளையும் பயன்களையும் நன்கு எளிதாக புரியும் வகையில் தெளிவாக இந்நூலாசிரியர் எழுதியுள்ளார். கவர்ச்சியில் மயங்கி பொய்ச்சுவையில் நாக்கை வளர்த்து இயல்பான ஆரோக்கியத்தை இழந்து வரும் மக்களை நாக்கில் மெய்ச்சுவைக்கு அழைத்துச் சென்று ஆரோக்கியத்துடன் வாழும் கலையை சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆரோக்கியத்தின் அடிப்படையை உணர்த்தி பிணிகள் வராது தடுத்தாளும் இந்நூலை யாத்த ஆசிரியர் திரு. இரத்தின சக்திவேல் அவர்களின் தொண்டினை எவ்வளவும் பாராட்டலாம்.