நாம் தினமும் புதுப்பிறவி எடுக்க்கிறோம் என்ற நினைவில் சோகம், கோபம், சினம் வியாபாரத்தை மண்ணில் புதைத்து, அன்பு, ஆரோக்கிய வியபாரத்தைத் தொடங்கினால் சிரிப்புக் கடலில் குளித்து சந்தோஷ முத்துக்களை கூடைகூடையாக அள்ளி வரலாம் என இயற்கைப்பிரியன் இரத்தின சக்திவேல் அவர்கள் இந்நூலில் விவரிக்கிறார்.
தினசரி 24 மணி நேரத்தில் 20 நிமிட உழைப்பு, பயற்சி, யோகா அவசியம். பிணிகளால் அவதிப்படும் மனிதர்களுக்குத் தேவை. அதை சிரிப்பு யோகா ஈடுகட்டி அதில் கோபம், சினம், துக்கம், சோகம், கவலை, மனபயம், வாழ்வு நிலையாமையை இவைகளைக் கரைத்திடும் அற்புதக்கலையை நூலாசிரியர் இயல்பாக, இணக்கமாக, இனிமையாக எளிமையாக விவரிக்கிறார்.