பூமியானது நான்கு மணி நேரத்தில் தன்னைத் தானே சுற்றி வந்த அந்தக் காலத்தில், பூமியின் உள் பகுதியிலே இருந்த திரவத்தில் அலை எழும்பியது. பூமி சுற்றச் சுற்ற, அலையின் அமுக்குதலும் விசை முடுக்கியதுபோல் ஆயிற்று.அவ்விதம் முடுக்கி விடப்பட்ட அலைகள் பூமியின் மெல்லிய ஓட்டைத் தாக்கின; மோதின. இவ்விதம் மோதியதால் அம்மெல்லிய ஓடு நொறுங்கியது. பூமி சுழன்ற வேகத்திலே, நொறுங்கிய பகுதியில் ஒன்று, தொலைவில் போயிற்று. அப்படிப் போனதுதான் சந்திரன்! பூமியிலிருந்து விலகிப் போன ஓடு தவிர மீதமுள்ள நொறுங்கிய துண்டுகள் என்ன ஆயின? குளத்திலே தெப்பம் மிதப்பது போல் மிதந்து கொண்டிருந்தன. அப்படி மிதந்த துண்டுகளே இப்போது நாம் காண்கிற நிலப் பாகம்; தேசங்கள்!