இந்த புத்தகம் Sujatha Reader அல்ல. இது சுஜாதாவின் பன்முகத்தன்மை என நான் எதைக் கருகிறேன் என்பதற்கான தொகைநூல். சுஜாதா என்ற எழுத்து ஆளுமையின் பரந்துபட்ட விருப்பங்கள், ஈடுபாடுகள், அக்கறைகளையே நான் முதன்மைப்படுத்தியிருக்கிறேன். ஆகவே இது சுஜாதா படைப்புலகின் ஒரு குறுக்குவெட்டுப்பார்வை போல உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதே இதன் தனிச்சிறப்பு. எஸ்.ராமகிருஷ்ணன்