ஆரோக்கியமான சமுதாயம் உருவாக வேண்டுமானால் பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளும், சுதந்தரங்களும் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டும். அந்தக் காலத்தில் இருந்தே, பெண்கள் அடிமைகளைப் போலவும், போகப் பொருளாகவும் நடத்தப்பட்டு வந்தனர். அந்த நிலை மாறுவதற்காகப் பல்வேறு தலைவர்களும், பல்வேறு அமைப்புகளும் போராடி, பல்வேறு சட்டங்களும் உருவாக்கப்பட்டு, பெண்களை அடிமைத்தளையில் இருந்து மீட்டெடுக்க காலங்கள் கரைந்தோடிவிட்டன. பெண்களின் பலவீனத்தைக் கருதியும், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுவதற்காகவும், அரசியல் சாசனப்படி சில சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இச்சட்டங்கள், பெண்களுக்குப் பாதுகாப்பையும் எதிர்காலப் படிப்பினையும் ஏற்படுத்தியுள்ளன.