ஆரோக்கியமாய் வாழவேண்டும் ' என்பது இந்த மண்ணில் பிறப்பெடுத்த கோடிக்கணக்கான மக்களும் விரும்பக் கூடிய ஒரு விஷயம்தான்.ஆனால் அதற்கு வழிகள் என்ன ? கடைப்பிடிக்கவேண்டிய முறைகள் என்னென்ன? என்பதையெல்லாம் தெரிந்துகொண்டவர்களும் அவற்றைப் பின்பற்றுவதில் அக்கறையோ ஆர்வமோ காட்டுவதில்லை.எளிதாகப் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் அவை சொல்லப்படவில்லை என்பதும் ஒரு சாரார் கூறும் குற்றச்சாட்டு. இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதே இந்நூலாசிரியரின் நோக்கம். தங்கபஸ்பம் சாப்பிடுவது வம்பை விலை கொடுத்து வாங்குவது.