இந்திய நாட்டு நீதிமன்றங்கள், இந்தியச் சாட்சியச் சட்டத்தின் அடிப்படையிலேயே தமது தீர்ப்புகளை வழங்குகின்றன. உரிமையில் வழக்குகளில், வழக்குத் தரப்பினர்கள் வாய்மொழிச் சான்றுகளையும் ஆவணச் சான்றுகளையும் சரியான முறையில் அளிக்கவில்லையேல், வழக்கின் முடிவு அவர்களுக்கு எதிராக அமைந்துவிடும் உரிமையியல் , குற்றவியல் வழக்குக்களில், முதல் விசாரணை, குறுக்கு விசாரணை, மறுவிசாரணை என்பது மிகவும் முக்கியமானதானகும். இந்த நூலில், முதல் விசாரணை என்றால் என்ன? குறுக்கு விசாரணை என்றால் என்ன? மறு விசாரணை என்றால் என்ன ? வழக்கில் எதுஎது தொடர்புடைய சங்கதிகள்? வழக்கில் எந்தெந்த ஆவணங்களை நீதிமன்றம் அனுமதிக்கலாம்? வழக்கில் யார்யார் சாட்சி சொல்லலாம்? என்பனவற்றிற்கான விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
- புலமை வேங்கடாசலம்.