இந்தியாவில் பல்வேறு காரணங்களால் ஏற்படும் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 1986ம் ஆண்டு குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு சட்டம் இயற்றப்பட்டது. மேலும், 1987ம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர் பற்றிய தேசிய கொள்கை உருவாக்கப்பட்டது. இக்கொள்கைப்படி, அதிக அளவில் குழந்தைத் தொழிலாளர் உள்ள பகுதியில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.இதன் அடிப்படையில், அதிக அளவில் குழந்தைத் தொழிலாளர்கள் கண்டறியப்பட்ட தருமபுரி மாவட்டத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் 28.11.1995ல் பதிவு பெற்ற சங்கமாக தொடங்கப்பட்டது. இத்திட்டம் மத்திய அரசின் 100 % நிதி உதவியுடன் மாநில தொழிலாளர் துறையின் மேற்பார்வையில் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு செயல்படுகிறது.