சிரிப்புக் கதைகள்! சிரிப்பை மட்டுமே மையமாகக கொள்ளாமல், சிந்திக்கவும் செய்துள்ளனவையாக எழுதியுள்ளேன். கற்பதும், கற்பிப்பதும் எவ்வளவு நன்மையோ! அதே அளவில் குறையாது சிரிப்பும், சிந்தனையும் நன்மை ஆகும். இதனை, சிறுவர், சிறுமியர் மட்டுமின்றி விரும்புபவர்கள் அனைவரும் படிக்கும் வண்ணம் எழுதியுள்ளேன். அனைவரும் படித்திட வேண்டும் என்ற ஆவலில், என்னை சின்னச்சின்ன சிரிப்புக் கதைகள் எழுதிட ஊக்கம் கொடுத்த பதிப்பகத்தின் தூய்மையான உயர்ந்த உள்ளங்களுக்கு நன்றி!
ராமனின் சித்தி, திடீர் திடீரென வீட்டிற்குள் இருக்கும் நேரம், ஒரு கருப்புக் கண்ணாடியை அணிந்து கொள்வாள். இதை ராமன் ரொம்ப நாளாக சித்தியிடம் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தான். அன்று அதற்கான நேரமும் வந்தது.உடனே அவன் தன் சித்தியிடம் போய் கருப்புக் கண்ணாடி அடிக்கடி அணிவதின் ரகசியத்தைக் கேட்டான். அதைக் கேட்ட அவள், "அதெல்லாம் ஒன்றுமில்லை இல்லை' என்றாள். அவனுக்கு அது திருப்தியான பதிலாக இல்லை. அதனால் மீண்டும் சித்தியிடம் கேட்டான்.