குக்கரில் பருப்பை வேகப் போட்டுவிட்டு, தயாராய் வைத்திருந்த காபி தம்ளரை எடுத்துக் கொண்டு பெட்ரூமை நோக்கி நடந்தாள் கார்த்திகா!
அவளை அணு அணுவாக வர்ணித்தால் அவள் கணவன் ரகுராமன் கோபித்துக் கொள்வான் என்பதால் ஒரு வார்த்தையில் கூறிவிடலாம்.
கார்த்திகா சந்தன நிற கோவில்சிலை. வயது இருபத்திஎட்டு என்றாலோ, பத்து வயது பெண் குழந்தைக்கு அம்மா என்றாலோ அடிக்க வருவார்கள். அப்படியொரு இளமை.கட்டிலில் ரகுராமன் ஒரு பக்கம், குழந்தை ஷைலஜா ஒரு பக்கமாகவும் உறங்கிக் கொண்டிருந்தனர்.