கனவே கலையாதே (Kanave Kalaiyadhe) என்பது 1999 ஆண்டைய இந்திய தமிழ்காதல்நாடக திரைப்படம் ஆகும். வ. கௌதமன் இயக்கிய. இப்படத்தில் முரளி, சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிம்ரன் தனது திரை வாழ்க்கையில் இப்படதில் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்தார். படத்திற்கான இசையை தேவா மேற்கொண்டார். இதை சிவசக்தி மூவி மேக்கர்ஸ் தயாரித்தது. படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது
ஆனந்த் ( முரளி ), அமிர்தா ( சிம்ரன் ) ஆகியோர் காதலர்கள். அமிர்தா ஒரு பஞ்சாபி, ஆனந்த் ஒரு தமிழர். திருமணத்திற்கு அமிர்தாவின் பெற்றோரின் ஒப்புதல் பெற, ஆனந்த் பஞ்சாபில் உள்ள அமிர்தாவின் வீட்டிற்கு செல்கிறார். அவர்கள் ஒன்று சேர்வதற்கு முன்பு, அமிர்தாவும் அவரது குடும்பத்தினரும் ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார்கள். அமிர்தாவின் பிரிவினையைத் தாங்க முடியாத ஆனந்த் மனச்சோர்வுக்குள்ளாகிறார். அவர் புதிய வாழ்க்கையைத் தொடங்கவேண்டும் என்று அவரது நண்பர்கள் அவரை சென்னைக்கு அழைத்து வருகின்றனர். அங்கு, அமிர்தாவைப் போன்ற தோற்றம் கொண்ட சாரதாவை (சிம்ரன்) பார்த்து ஆச்சர்யம் கொள்கிறார். துவக்கத்தில் இருவர்ருக்குமிடையில் ஏற்படும் சிக்கல்களுக்குப் பிறகு, ஆனந்தும் சாரதாவும் ஒருவருவரையொருவர் புரிந்துகொண்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால் இந்த கட்டத்தில், சாரதாவின் பழைய காதலரான சேகர் (சக்தி குமார்) அவளுக்காக இன்னும் காத்திருப்பதை ஆனந்த் அறிகிறார். விதியின் இந்த விசித்திரமான விளையாட்டு எவ்வாறு முடிகிறது என்பதே முடிவு?.