தேவதை வம்சம் - மாலை மாற்றும் போதுதான் புருஷனின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தாள் பவித்ரா. ஒப்புக்குக் கூட ஒரு புன்னகையின்றி இறுகிய பாறையாயிருந்தது. தினகரின் முகம். ஒரு கல்யாண மாப்பிள்ளையின் முகம் இப்படியா இருக்கும்? யாரிடம் கோபம் இவனுக்கு? முகத்தை இப்படி இறுக்கமாக வைத்துக் கொள்ளுமளவுக்கு என்ன பிரச்சனை? யாரோ அவன் அங்கவஸ்திரத்தையும் அவள் புடவைத் தலைப்பையும் முடிச்சிட அவர்கள் மும்முறை அக்னி வலம் வந்தார்கள். தாலி கட்டும் போது அவன் முகத்தின் இறுக்கம் ன்னும் அதிகரிக்க இனம் புரியாத கலக்கம் அவள் அடிவயிற்றில் பரவியது.
வாழ்க்கை என்பது மெழுகுவர்த்தியல்ல. அது டார்ச்சு லைட் போன்றது. நம் தலைமுறைக்குள்ளாக அதைப் பூரணமாக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த தலைமுறைக்கென அதிலுள்ள எதையும் மீதமாக்கி வைக்கக் கூடாது. -பெர்னாட்ஷா.