எளிய
செலவில்லாத பயிற்சியாக இருப்பினும் முத்திரைகள் தரும் பலனோ அதிகம்.
முத்திரைகள் உடலுக்கும் மனதிற்கும் அமைதியைத் தருகிறது. எனவே இரத்த அழுத்த
நோய், மாரடைப்பு போன்ற நோய்களைத்
தடுக்கின்றன. தூக்கமின்மை, மூட்டுவலி, ஞாபக சக்தி குறைவு போன்ற பல
நோய்களைக் குணமாக்குகின்றன. பதற்றத்தைத் தடுத்து, சுறுசுறுப்பாக்குகின்றன.
கண்பார்வைக் குறைவு, தோல் வியாதிகள், வாயு சம்பந்தமான வயிற்றுக் கோளாறுகள்
போன்ற வியாதிகளைக் குணமாக்குகின்றன. முத்திரைகள் நம் மனதில் எதிர்மறைச்
சிந்தனைகளை நீக்கி, நேர்மறைச் சிந்தனைகளைத் தூண்டுகின்றன. ஆன்மீகத்தில்
வளர்ச்சி பெறச் செய்கின்றன.