உலக சகோதரத்துவத்தின் சங்கநாதத்தை நம் உள்ளத்தில் எழுப்பத்தக்கதாய் ஜைன
தருமம் இருந்தது.வாழ்க்கை மரணத்துடன் முடிவதில்லை. மரணத்தில் தொடங்குகிறது
வாழ்வு. எந்த ஒரு மதமும் அத்தனை சுலபமாக மனிதனை வென்று விடுவதில்லை
என்பதுவே உண்மை. ஆகவே, மனிதனை வெல்வதற்கு அத்தனை மதங்களும் மிகக் கடினமாகப்
போராட வேண்டியிருந்தது. வினைக் கொள்கை என்பது ஜைனர்களின் உயிர்க்
கொள்கையாகும். வினைகளைப் பற்றி பிற சமயத்தாரும் பேசி வந்தபோதிலும்,
ஜைனர்களின் அச்சாணிக் கொள்கையாக இது விளங்குகிறது. ஜைன தர்மம் வேறு எந்த
தர்மத்தையும் பின்பற்றி உருவாக்கப் பட்டதல்ல. அது ஒரு சுதந்திர தர்மம். ஜைன
தர்மம் அஹிம்சை சித்தாந்தத்தின் உயரிய தகுதியைப் பெற்றுள்ளது...