கலையும் இலக்கியமும் வாழ்க்கைக்கா? பொழுது போக்கிற்கா? என்ற தலைப்பில் ஒரு பட்டிமன்றம். அப்பொழுது நான் வடாஆர்க்காடு மாவட்டத்தில் திமிரி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஆனைமல்லூரில் பஞ்சாயத்துப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்தேன். முப்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன். அந்தப் பட்டிமன்றத்தில், கலையும் இலக்கியமும் வாழ்க்கைக்கே! என்று நான் வாதாடினேன். வெற்றியும் பெற்றேன்.