இக்கதைகள் மூலம் நான் அறிந்தவர்களின் அனுபவ உலகோடு எனக்கு ஏற்பட்ட அறிமுகங்கள் மன இறுக்கங்களிலிருந்து என்னைத் தவிர்த்துக் கொள்ள உதவியிருக்கிறது என்னைத் தவிர்த்துக் கொள்ள உதவியிருக்கிறது. இவர்களோடானப் பரிச்சயம் எழுத்து வெளிப்பாடு இல்லையென்றால் சாத்தியமாகியிருக்காது. என் உலகத்தை வெவ்வேறு வகைகளில் விவரித்துக் கொள்வதற்கும் இவர்கள் பயன்பட்டிருக்கிறார்கள்.