இந்தியாவில் கல்வி என்பது லாபகரமான ஒரு தொழிலாகிவிட்டது இந்தத் தொழிலை அமெரிக்கா, பிரிட்டன். ஆஸ்திரேலியா போன்ற வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகள் சர்வதேச ரீதியில் நடத்துகின்றன.
ஆனால், சோசலிஸ கியூபாவில் கல்வி என்பது பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை உரிமை என்பது வெறும் எழுத்தாக மட்டுமின்றி செயலாகவும் அமுல்படுத்தப்படுகிறது.
முதலாளித்துவ பொருளதார முறை கொண்ட இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பணத்திற்கேற்ப படிப்பு என்ற கேவலமான நிலைமை. கியூபாவில் உயர் படிப்பு வரையிலும் அரசாங்கத்திற்கே முழுப்பொறுப்பு. அங்கு எந் நிலைமையிலும் தனியார் கல்வி நிறுவனங்கள் தலைகாட்ட முடியாது.