என் எழுத்துக்கள் என் மக்களின் வாழ்வியல், சமகால வரலாறும் கூட.
கலைப்பூர்வமான யதார்த்தத்தைப் பேசவிட வேண்டும் என்பதே எனது இலக்கு!... முப்பத்தொன்பது ஆண்டு கால வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டு எனது பார்வையைக் கூர்மைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். என் பிதாமகர்கள் விட்டுச் சென்றிருக்கும் வாழ்வியல் கூறுவகள். அவர்களின் பங்களிப்புகள் மகத்தானவை.
இவற்றைக் கண்டு நான் வியந்து நின்று விடுவதோடு இல்லை. அவர்கள் எல்லோரும் எவ்வாறு வாழ்க்கையை இயற்கையோடு ஒன்றித்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பதை அவர்கள் விட்டுச் சென்று இருக்கும் வாழ்வியல் சிந்தினைகளில் என்னை வசப்படுத்திக் கொண்டு இருக்கிறேன்.