சில்லென்று வீசும் காற்று. பூக்கள் பூத்துக் குலுங்கும் பச்சைப் பசேலென்று தாவரங்கள். அதையொட்டி சலசலப்பு இல்லாமல் சிறிய சிறிய கூழாங்கற்களின் மீது ஓடிச் செல்லும் தெளிந்த நீரோடை, அந்த நீரோடையில் ஆனந்தமாகச் செல்லும் சிறு சிறு மீன்கள் இந்தச் சூழ்நிலையில் இருக்கும் மனிதனின் மனம் எவ்வளவு அமைதியுறும் என்று நீங்கள் எண்ணிப் பாருங்கள். வாசகர்களே நீங்களும் அநுத்தமா வின் நூல்களைப் படிக்கும்போது இதே சூழ்நிலைதான் உங்களது உள்ளத்திலும் உண்டாகும் என்று நாம் உறுதியாகச் சொல்லலாம் அநுத்தமா தன்னுடைய எல்லாக் கதைகளிலும் ஒருவித மென்மையையே கையாள்வார். இவர் தன் நிஜ வாழ்க்கையிலேயே நல்ல மன உறுதியுடன் தெளிவான சிந்தனையும் கொண்டவர்.