சீஸ்டோ தொண்டு நிறுவனத்தின் சார்பில், கப்பல் கவிஞர் கிருஷ்ணமூர்த்தி எழுதிய ஈர நதிகள், திசைகள் அசைவதில்லை, முதுமைகளின் தேவதை, பாடாத பல்லவிகள் ஆகிய நான்கு நூல்கள் வெளியீட்டு விழா, தெற்கு ரயில்வே முதன்மை இயந்திரவியல் பொறியாளர் வி. கார்மலசுக்கு பணி நிறைவு பாராட்டு விழா, அவருக்கு நற்குணச் செம்மல் விருது வழங்கும் விழா ஆகிய மும்பெரும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்த வி. கார்மலஸ் நான்கு நூல்களையும் வெளியிட்டார். கார்மலசின் மனைவி இசபியூஸ் விருதுகளை வழங்கினார்.