தமிழின் பெருமையை உலகறியச் செய்தவர்கள் திராவிட இயக்கத்தவர். தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதுபவர்கள் திராவிட இயக்கத்தின் இலக்கிய மறுமலர்ச்சியை மறந்து விடக் கூடாது. தமிழில் சிறுகதைகள் பொழுதுபோக்காக எழுதப்பட்ட நிலை மாறி சமூகப் பிரச்சினைகளை முன் வைத்து பல்வேறு திருப்பங்களை உருவாக்கியவர்கள் திராவிட இயக்க எழுத்தாளர்கள். 13 எழுத்தாளர்களின் படைப்புகளை கோவையாக்கி சீதை பதிப்பகம் வெளியிட்டுள்ளது பாராட்டுக்குரியது திராவிட இயக்க நூற்றாண்டு நினைவாக இந்நூல் இன்னும் பல நூறு ஆண்டுகள் நிலைக்கும், பேசும் காவியமாகத் திகழும்.