சோமசுந்தரம். இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 16 சிறுகதைகளைக் கொண்டுள்ளது. நேஷனல் புக் டிரஸ்ட் டிரஸ்ட், இந்தியா இதனை வெளியிடப்பட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு 1976 ஆம் ஆண்டு வெளியானது.
இரண்டாவது பக்கத்தில் புதுமைப்பித்தனைப் பற்றிய குறிப்பும், அதைத் தொடர்ந்து தொகுப்பாசிரியரின் முன்னுரையும் அமைந்துள்ளன. முன்னுரையில் புதுமைப்பித்தனின் எழுத்துலக வரலாறும் அவரது எழுத்து நடை குறித்த விமரிசனங்களும், அவரது சிறுகதைகள் குறித்து புதுமைப்பித்தனின் கூற்றுக்களும் அவை குறித்த தொகுப்பாசிரியரின் கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன.
முன்னுரையைத் தொடர்ந்து வரிசையாக 16 சிறுகதைகளும் தரப்பட்டுள்ளன.
புதுமைப்பித்தனின் சிறுகதைகளின் தொகுப்புகள் பல, வெவ்வேறு ஆசிரியர்களால் தொகுக்கப்பட்டு வெவ்வேறு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளன.