தமிழ்நாடு
சிறுதொழில் நிறுவனத்தில கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து, பிறகு உதகை
ஹிந்துஸ்தான் போட்டோ பிம் தொழிற்சாலையில் இணைந்து, அங்கு முதுநிலை
மேலாளராகப் பணி ஓய்வு பெற்றவர். தற்போது பள்ளி, கல்லூரிகள், அலுவலகம்,
தொழிலகம் ஆகியவற்றில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், அதிகாரிகள்
ஆகியோருக்கு பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும், மென்திறன் பயிற்சிகளும்
அளித்து வருகிறார்.திருச்சி தன்னம்பிக்கை பயிலரங்கத்துடன் ஆரம்ப காலம்
முதல் இணைந்து செயல்பட்டு வருகிறார். பயிலரங்கத்தால் நம்பிக்கை நாயகன் என்ற
விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டிருக்கிறார்.சாதாரண மனிதர்களும் சாதனை
மனிதர்களாக மாறும் வகையில் பல சுயமுன்னேற்ற நூல்களை எழுதி வருகிறார்.