குறிஞ்சி செல்வர். டாக்டர் கொ.மா.கோதண்டம் இராஜ பாளையத்தில்
1938-ஆம் ஆண்டு பிறந்தவர். இதுவரை 112 நூல்களை எழுதியுள்ளார். இதில் 94
நூல்கள் வெளி வந்துள்ளன. இவர் பெற்ற விருதுகள் 76.முதல் நூல் 'ஆரண்ய
காண்டம்' இந்தியக் குடியரசுத் தலைவர் இலக்கிய விருது பெற்றது. இந்தியக்
குடியரசுத் துணைத் தலைவர் திரு.கிருஷ்ணகாந்த் இவரது 'குறிஞ்சாம் பூ' நூலை
வெளியிட்டு தம் மாளிகையில் விருந்தளித்தார் பாரதப் பிரதமர் இந்திரகாந்தி
அம்மையார் இவரது சிறுவர் 11 இலக்கிய பணிகளை நேரில் பாராட்டியுள்ளார்.
2013-ஆம் ஆண்டு குழந்தைகள் தின நாளன்று தமிழக ஆளுநர் மேதகு. ரோசையா அவர்கள்
'உத்தம எழுத்தாளர்' என்ற விருதளித்தார்மலேசியப் பல்கலை தொலைநிலை
கல்வித்துறை இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளித்து பாராட்டியுள்ளது. இவர்
எழுதிய 'காட்டுக்குள்ளே இசைவிழா' என்ற சிறுவர் நூலுக்கு மத்திய அரசு
சாகித்ய அகாடமி விருது வழங்கி கெளரவித்துள்ளது.