திரு. செந்தீ நடராசன் எழுதி வெளியிட்டுள்ள ‘தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம்’ என்ற நூல் ‘பழந்தமிழ் எழுத்து வடிவங்களான தமிழ் பிராமி, வட்டெழுத்து, கிரந்தம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் ஒரு தொடக்க நூல்.’ இந்த எழுத்துக்களின் ‘பரிமாணங்களை, வளர்ச்சிகளை’ இந்த நூல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இப்பொருள் பற்றி தொல்லியல் அறிஞர்கள் எழுதிய சில நூல்களில் மேலதிகமாகத் தெரிந்து கொள்ளலாம்.
இந்நூல் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று பகுதிகளில் முறையே தமிழி என்னும் தமிழ் பிரம்மி, வட்டெழுத்து மற்றும் கிரந்த வரி வடிவங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. நான்காம் பகுதி அளவைகள் – குறியீடுகள் பற்றி ஒரு பக்க பட்டியல் ஒன்று காட்டப்பட்டுள்ளது. முகத்தலளவை மற்றும் நிலஅளவை அலகுகள் (units) பட்டியலிடப்பட்டுள்ளன. ஐந்தாம் பகுதி தமிழ் எண்களின் (Tamil Numerals) வரிவடிவம் மற்றும் பரிணாம வளர்ச்சியினை விவரிக்கும் பட்டியல் ஒன்று காட்டப்பட்டுள்ளது. ஆறாம் பகுதி தமிழகக் கல்வெட்டு முதலிய ஆவணங்களில் வழங்கப்படும் ஆண்டுக்கணக்கு பற்றி சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளது.