book

ஸ்ரீ வைஷ்ணவ நெறிமுறைகள்

Sri vaishnava nerimuraikal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெ. விஜயலெஷ்மி
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Add to Cart

வைணவத் தலங்களின் ஆகம வழிபாட்டு முறையில் இரு மரபுகள் உண்டு. முதலாவது : பஞ்சராத்ரம ஆகமம். கி.மு. முதலாயிரத்தில் உருவான இம்மரபு விஷ்ணுவை வணங்குவதற்கான சில நெறிமுறைகள், கோட்பாடுகள், சடங்குகள், தொன்மங்கள் ஆகியவற்றின் தொகுப்பு, இறுக்கமான பார்ப்பன ஆதிக்கம் உருவாகாத காலத்தில் தோன்றிய இவ்ஆகம நெறியில் விஷ்ணு வழிபாட்டில் பார்ப்பனரல்லாதோரின் பங்கேற் பிற்கும், சமஸ்கிருதம் இல்லாத மக்கள் மொழிகள்
பயன்படுத்தப்படுவதற்கும் ஓரளவு இடமுண்டு. இரண்டாவது மரபு : வைகானச ஆகமம். விஷ்ணு வழிபாட்டுச் சடங்குகளில் பார்ப்பனர்கள் மட்டுமே பங்கேற்பதற்கும், சமஸ்கிருதம் மட்டுமே பயன்படுத்தப்படுவதற்கும் காரணமான இம்மரபே ஸ்ரீராமானுஜரின் காலத்திற்கு முன்னர் தென்னக வைணவக் கோயில்களில் வழிபடு நெறியாக இருந்தது.