பளிச்சென்ற ஒரு உண்மை தெரிந்தது. திருமண விழாக்களிலே நிகழும் கலை நிகழ்ச்சிகள் மிகுந்த சுவையுடையதாகவும், சபையோர் உள்ளத்தைக் கவரத்தக்கதாகவும் இருக்க வேண்டும்! நானும் பாடகரை மறந்துவிட்டுச் சிந்தனையில் ஆழ்ந்தேன்...! கலை விருந்து மக்களைக் கவர்வதோடு மணமக்களுக்கும் பயனுடையதாக இருக்குமானால்! எனது இந்தச் சிந்தனையின் முடிவு தான் 'வாழ்வில் இன்பம்' தோன்றுவதற்குக் காரணம்.