
மழையோடு வந்த ஞாபகம்
Malaiyodu Vantha Gnyabagam
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. வெங்கடேஷ்பிரபு
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :63
பதிப்பு :2
Published on :2010
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, காதல்
Out of StockAdd to Alert List
ஆறிப்போன காதலையும் மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சத்தை மூட்டி அனல் இல்லாமல் சூடேற்றி மனசைக் கொதிநிலைக்குக் கொண்டுசெல்கிறது இது. வரவேற்பட வேண்டிய பரவசம்.
காதலி கையால் வாங்குகிற கிள்ளும் சரி, காதல் கவிதைகளில் வருகிற சொல்லும் சரி, மறக்க முயன்றறலும் மறக்க முடியாதவை. தவிர்க்க நினைத்தாலும் தவிர்க்க முடியாதவை. இவ்வுலகில் திகட்டாத தித்திப்பு ஒன்று இருக்கிறதென்றால் அது காதலும் காதலுக்குட்பட்ட ஸ்பரிசங்களும்தான்.
அருவியில் குளித்துவிட்டு ஈரம் சொட்டச் சொட்ட ஒய்யாரமாக நடந்து வருகின்ற ஒரு அழகான விடலைப் பெண்ணின் நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்த காதல் கவிதைகள் அதிக வாசகர்களைச் சென்றடைய என் ஆன்பார்ந்த வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்
த. கண்ணன்
