book

தமிழ்வழிக் கல்வி ஒரு கானல் நீரா?

Tamilvazhi Kalvi Oru Kanal Neera?:

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.சு. நரேந்திரன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2004
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், பொது அறிவு
Out of Stock
Add to Alert List

தாய் மொழிவழிக்கல்வி என்ற உடனே, காந்தி அடிகளைப் போலவே தாய்மொழிவழிக்கல்வியைக் கல்வி உலகில் உறுதியாகவும்
வெளிப்படையாகவும் வரவேற்றுப் பேசிய முதல் பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்கள் என்பது இயல்பாகவே இங்கே நம் நினைவுக்கு வருகிறது. டாக்டர் நரேந்திரன் அவர்கள்  மருத்துவத் துறையில் பாராட்டத் தக்க வகையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழ் வழிக் கல்விக்காக்க் கட்டுரை வாயிலாகவும், சொற்பொழிவு வாயிலாகவும் இவர் வழங்கியுள்ள  பங்களிப்புகள் தமிழ் ஆர்வலர் எல்லோரையும் ஊக்கப்படுத்துவனவாக அமைந்துள்ளது. தாய்மொழி வ.இயாக்க் கல்வி பெறுவதில் உள்ள நன்மைகளை அறிஞர்களின் மேற்கோள்களோடு விளக்கிய பிறகு இனி  என்ன செய்ய வேண்டும் என்பதையும் ஆசிரியர் இறுதியில் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக்கூறுகிறார்.  தமிழ்வழிக் கல்வி தமிழ் நாட்டில் விடுதலைக்கு முன்பே கட்டாயமாகக்ப் பட்டிருந்தது. ஆங்கிலம் இரண்டாம் மொழியாக ஆறாம் வகுப்புக்கு மேல் ஒரு மொழிப்பாடமாக மட்டுமே கற்பிக்கப்பட்டு வந்தது. 1941 இல் மாணவர்கள் முதலாவதாகத் தமிழ்வழிக் கல்வி பெற்றுப் பள்ளியிறுதித் தேர்வினை எழுதினார்கள். டாக்டர் . நரேந்திரன் தமிழ்வழிக்கல்வி என்ற தலைப்பில் உருவாக்கியுள்ள இந்த நூல் தமிழகத்துக்குப் பெரிதும் தேவையான நூல். அவருடைய பணி பெரிதும் போற்றிப் பாராட்டத் தகுந்த மணி . தமிழகம் இந்த நூலால் பயன் பெற வேண்டும். ஆசிரியர்க்குத் தமிழுலகம் ஊக்கமும் ஆக்கமும் அளித்து இந்தப் பணியைப் பாராட்டி
போற்ற வேண்டும்.