book

பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார்

Pagutharivu Pagalavan Thanthai Periyaar

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர். ப. பாலசுப்பிரமணியன்
பதிப்பகம் :புத்தகப் பூங்கா
Publisher :Puthaga poonga
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :134
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

னிதனுடைய கைகள், கால்கள் சமமாக இயங்குவது போல, ஆண்-பெண் இருக்க வேண்டும். ஆதிக்கம் செலுத்துகின்ற ஆண்கள், பெண்களுக்கு அதை விட்டுக் கொடுக்க மறுக்கின்றார்கள்” என்றார் தந்தை பெரியார்.

ஒருசமயம் ஆண்களைப் பார்த்து பெரியார் இவ்வாறு கேட்டார், “நீங்கள் உங்கள் மனைவிமார்களை நினைத்துக் கொண்டு, ெபண்களுடைய சமத்துவத்தைப் பற்றி நினைக்காதீர்கள். உங்கள் தாயை, மகளை, சகோதரியை நினைத்துக் கொண்டு யோசியுங்கள்” என்று சொன்னார்.

ஒரு சமயம் ஒரு பத்திரிகையை படித்துக் கொண்டிருந்த, ஐயா கி. வீரமணி அவர்கள், மேலை நாட்டிலே ஒரு ஊரில் நடைபெற்ற மூட நிகழ்ச்சி பற்றிய செய்தியைப் படித்தார்.

உடனே, அந்தச் செய்தித்தாளை தந்தை பெரியாரிடம் கொண்டு வந்து காட்டி, “பாருங்கள் மேலை நாட்டிலும் மூடப்பழக்கங்கள் உள்ளன” என்றார்.

அதனைக் கேட்ட பெரியார் சிரித்துக் கொண்டே, “முட்டாள்தனம் என்ன உனக்கே, உன் நாட்டுக்கே சொந்தம் என்று நினைத்தாயா? அது உலகத்துக்கே சொந்தம்” என்று அமைதியாகச் சொன்னார்.