நேர்மையாக
பணியாற்றிய ஒரு நண்பனுக்கு ஏற்பட்ட அனுபவமே “நேர்மை ஒரு குற்றமா?” என்ற
கதை. ஒரு நல்ல ஆசிரியன் நினைத்தால், முயன்றால் ஒரு மோசமான மாணவனையும்
மாற்றி விடமுடியும் என் நம்பிக்கை. இதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தவன்!
உணர்த்தியவன் நான்!
‘அண்ணன்’ என்ற கதை
எனது நெகிழ்வான உண்மை அனுபவமே! ‘கண்டிஷன் கல்யாணம்’ சிறுகதை முற்றும்
கற்பனையான நகைச்சுவைக் கதை! யார் கண்டது? உலகம் போகிற போக்கில் பெண்கள்
தாங்கள்தான் தாலி கட்டுவோம் என்று கோரிக்கை வைத்தாலும் வைக்கலாம்!
இந்திய
இளைஞர்கள் வேலை தேடி வெளிநாடு செல்வதைப் பார்த்து வருந்துகிறேன். அதன்
வெளிப்பாடுதான் ‘பணம் சிரித்தது’ என்ற கதை. இப்படி ஏதாவது ஒரு நிகழ்வின்
பாதிப்பு இதிலுள்ள ஒவ்வொரு கதையிலும் உண்டு! அந்த வகையில் இதில் உள்ள
கதைகள் உங்களைக் கவரும் என்று நம்புகிறேன்.