குற்றாலக் குறிஞ்சி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
Kuttrala Kuravanji
₹275+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோவி. மணிசேகரன்
பதிப்பகம் :பூம்புகார் பதிப்பகம்
Publisher :Poompuhar Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :320
பதிப்பு :1
Published on :2014
குறிச்சொற்கள் :சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
Out of StockAdd to Alert List
1992 ஆம் ஆண்டின் சாதித்ய அகாதமி விருது பெற்ற ஓர் அபூர்வ இசையிலக்கியப் புதினம். அபூர்வமாகக் காணப்படும் குறிஞ்சியைப்போல, இந்நாவலும் தமிழுக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம் என்றே சொல்லலாம்.
குறிஞ்சி என்ற ராகத்தின் பெயரையே தன் பெயராகக்கொண்டு, தாழ்ந்த குலத்தில் பிறந்துவிட்ட பெண். அவளின் சீலம், ஞானம், ‘தமிழ்ப் பாட்டையே பாடுவேன்’ என்கிற வீரம், ‘மக்களுக்காக மக்கள் மத்தியில் மட்டுமே பாடுவேன்; சமஸ்தானங்களை, ஜமீன்களை, கலெக்டர்களை, வெள்ளைக்காரத் துரைகளை மதியேன்; அவர்களுக்காகப் பாடேன்’ என்ற தியாகம்; இவையே குறிஞ்சியின் ஆரோகணம், அவரோகணம், ஆலாபனை எல்லாம். இதில் வரும் ஞானசுந்தரம், ராஜகாந்தி, முத்துசாமி தீட்சிதர், ஆனைய்யா, நெல்சன் துரை, அபிராமபட்டர், தியாகய்யர், கோபாலகிருஷ்ண பாரதியார், சரபோஜி மன்னர் எல்லாம் பிசிரில்லாத பக்க வாத்திய பாத்திரங்கள்.
நாவலின் ஒவ்வோர் அத்தியாயமும் ஓர் ராகத்தின் பெயரால் அமைந்திருக்கிறது. தாள – லயம் – பிறழாத – சுருதி பிசகாத சுத்தமான சங்கீத நாவலாக படைத்து முத்திரை பதித்திருக்கிறார், இலக்கிய சாம்ராட் கோவி.மணிசேகரன்.
குறிஞ்சி என்ற ராகத்தின் பெயரையே தன் பெயராகக்கொண்டு, தாழ்ந்த குலத்தில் பிறந்துவிட்ட பெண். அவளின் சீலம், ஞானம், ‘தமிழ்ப் பாட்டையே பாடுவேன்’ என்கிற வீரம், ‘மக்களுக்காக மக்கள் மத்தியில் மட்டுமே பாடுவேன்; சமஸ்தானங்களை, ஜமீன்களை, கலெக்டர்களை, வெள்ளைக்காரத் துரைகளை மதியேன்; அவர்களுக்காகப் பாடேன்’ என்ற தியாகம்; இவையே குறிஞ்சியின் ஆரோகணம், அவரோகணம், ஆலாபனை எல்லாம். இதில் வரும் ஞானசுந்தரம், ராஜகாந்தி, முத்துசாமி தீட்சிதர், ஆனைய்யா, நெல்சன் துரை, அபிராமபட்டர், தியாகய்யர், கோபாலகிருஷ்ண பாரதியார், சரபோஜி மன்னர் எல்லாம் பிசிரில்லாத பக்க வாத்திய பாத்திரங்கள்.
நாவலின் ஒவ்வோர் அத்தியாயமும் ஓர் ராகத்தின் பெயரால் அமைந்திருக்கிறது. தாள – லயம் – பிறழாத – சுருதி பிசகாத சுத்தமான சங்கீத நாவலாக படைத்து முத்திரை பதித்திருக்கிறார், இலக்கிய சாம்ராட் கோவி.மணிசேகரன்.