book

நான் நாத்திகன் - ஏன்?

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. ஜீவானந்தம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :38
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123419428
Out of Stock
Add to Alert List

சிறையில் தலைமை வார்டர் சர்தார்சிங் பகத்சிங்கிடம் தருவதற்கு ஒரு புத்தகத்துடன் வந்தார். அவர் ஒரு மத நம்பிக்கையுள்ள சீக்கியர். எனவே அவர் சீக்கியர்களின் புனித நூலான "குத்கா" வைக் கொடுத்து "இந்தக் கடைசி நேரத்திலாவது இதைப் படித்துக் கடவுளை நினைத்துக்கொள்" என்று கூறினார். அதற்கு பகத்சிங் பணிவாக அவரைத் தந்தைபோல் தான் பாவிப்பதாகவும், ஆனால் தனது வாழ்நாளில் கடவுளைப் பற்றிச் சிந்திக்கவில்லை என்றும் கூறினார். மேலும் இந்தக் கடைசி தருணத்தில் அதைச் செய்தால் பகத்சிங்கிடம் பலவீனம் வந்துவிட்டது என்று மக்கள் தவறாகக் கருதுவார்கள் என்று கூறினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் பாபா ரந்தீர்சிங் லாகூர் மத்திய சிறையில் 1930-31 இல் பகத்சிங் இடம் கடவுள் நம்பிக்கையை ஏற்படுத்தக் கடுமையாக முயற்சி செய்தார். ஆனால் தோல்வியடைந்தார். அவர் பொறுமையிழந்து இகழ்ச்சியாக, "தலைக்கிறுக்குப் பிடித்து அகம்பாவத்துடன் கடவுளுக்கும் உனக்குமிடையே ஒரு கறுப்புத் திரையைத் தொங்கவிட்டிருக்கிறாய்," என்று பகத்சிங்கிடம் கூறினார்.[1][2] அவருக்குப் பதில்கூறும் விதத்தில் பகத்சிங் எழுதிய கட்டுரையே "நான் ஏன் நாத்திகன் ஆனேன்"