
உடனுறை இடாகினி
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மஞ்சுநாத்
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2024
Out of StockAdd to Alert List
மஞ்சுநாத் இமயமலையில் பலமுறை பயணம் செய்தவர். இனிமேலும் செய்யப்போகிறவர். பனி போர்த்திய மலையும் செடிகொடிகளும் மரங்களும் படர்ந்த மலையும் பெளதிக இடங்களாகவும் உருவகங்களாகவும் அவர் கதைகளில் விரவிக்கிடக்கின்றன. ஒன்றைத் தொட்டால் இன்னொன்றினுள் இழுத்துப்போகும் விசைகளாகச் சில கதைகள்; ஒரு பாதையில் நுழைந்ததும் புதிர்ப்பாதைகளாக எங்கேங்கோ கூட்டிச் செல்லும் கதைகள்; கரிக்குருவிகளின் கீச்சொலிகளாகவும் வாசங்களாகவும் உயிர்களை விழுங்கும் மலைப்பாம்பாகவும் உணர்வுகளையும் உயிர் பறிக்கும் நினைவுகளையும் தாங்கிவரும் கதைகள்; இடாகினிகளும் உண்டு; கால்நடைகளுக்குப் போடுவதுபோல் இடாகு போடுதலும் உண்டு; அங்கங்கே இடார்களும் உண்டு. ஆனால் எல்லாக் கதைகளின் பின்னாலும் ஒலித்துக்கொண்டே இருப்பது சுருதி பிசகாத இடாயம். - அம்பை
