
திருமூலரியம்
₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் திருமூலர் முருகன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2024
Out of StockAdd to Alert List
பிறப்பு - இறப்புத் தொடர்பான உயிர்களின் ஐயங்களைக் கண்டு அஞ்சத் தேவையில்லை; உடலைப் பேணினால் நோய்கள் நெருங்கா; சித்தம் தெளிந்தோர்க்குத் துன்பம் இல்லை; ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம் நடுங்குவதில்லை; ஆன்ம அறிவியலின் பாதைகள் விரைவாகத் திறந்து கொள்ளும்; விதிவசப்பட்டு மீள முடியாமல் அழுந்திக் கிடக்கும் மக்கள், இறையருளைப் பற்றுக்கோடாகக் கொண்டு மீட்சி பெற முடியும் என மானுடரை ஆற்றுப்படுத்தும் திருமூலரின் குரல், அவநம்பிக்கையில் அமிழ்ந்துகிடக்கும் இந்த உலகத்திற்கு உடனடியாகத் தேவைப்படும் நவீனமான குரலாகும். மானுட குல விடுதலைக்குத் திருமூலரின் சிந்தனைகள் தேவைப்படுகின்றன, உள்ளத்தில் அன்பும் அமைதியும் குடியேறிக் கட்டுக்கோப்பான உடலுடன் கூடிய உணர்வுகளை நெறிப்படத் துய்க்கும் மனிதனுக்கு, வாழ்வாங்கு வாழ்வதற்குத் திருமந்திரம் வழிகாட்டுகிறது. திருமந்திரம் அளிக்கும் மெய்ப்பொருள் தெளிவைச் சான்றுகளின் அடிப்படையில் நுணுகி ஆராயும் முயற்சி, இந்நூலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
