தமிழில், சமகால அரசியலைத் தொட்டுப் பேசுகிற நாவல்கள் பெரும்பாலும் உண்மையும் புனைவும் கலந்து நெய்யப்பட்டதாகவே இருக்கும். அபூர்வமாக இந்நாவல் வேறு முகம் கொள்கிறது. இந்தளவு உண்மைக்கு விசுவாசமான இன்னொரு அரசியல் நாவல் இங்கு எழுதப்பட்டதில்லை.
இந்த நாவல் எனக்கு மிகவும் பிடித்தது. அரசியல் மட்டுமல்ல காரணம். பெண் மனம் என்றொரு கருத்தாக்கம் இங்கே அதிகம் பேசப்படுகிறதொரு விஷயம். எந்தப் பெண் எழுத்தாளரையும்விட மாலன் இதில் அதனை ஆழத் தோண்டி அகழ்ந்தெடுத்திருக்கிறார். அதிகாரத்தில் உள்ள பெண்கள்.
அதிகாரத்துக்கு ஆசைப்படும் பெண்கள். அதிகாரத்தில் உள்ளவர்களால் முகம் பொசுங்கி, காலத்தில் கரைந்துவிடுகிற பெண்கள்.
- பா. ராகவன்

