
இடைக்காலச் சோழர்களின் நிர்வாக முறைகள்
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆ. துளசேந்திரன்
பதிப்பகம் :யாப்பு வெளியீடு
Publisher :Yaappu Veliyeedu
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
Out of StockAdd to Alert List
கும்பகோணம் வட்டாரத்தில் உள்ள கல்வெட்டுகளில் காணலாகும் சமுதாய நிலைகள் குறித்துத் தமது முனைவர் பட்டத்திற்காக மிக விரிவாக ஆராய்ந்திருப்பதோடு, பல்வேறு கல்வெட்டுகளையும் தொல்லியல் வரலாற்றுச் சின்னங்களையும் கண்டறிந்துள்ளார். மேலும், கல்வெட்டு, தொல்லியல், கலை வரலாற்று ஆய்வுகளில் தொடர்ந்து தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். மயிலாடும்பாறை, தாண்டிக்குடி, நாகப்பட்டினம், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வுகளிலும் பங்கெடுத்துள்ளார். கல்வெட்டு, வரலாறு, கோயிற்கலை, தொல்லியல், சமயம், அரசியல் தொடர்பாக மூன்று ஆய்வு நூல்களையும், அய்ம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டிருக்கிறார். இவரது ஆய்வு நெறிகாட்டலில் பதினான்கு பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்கள். அறுபதுக்கும் மேற்பட்டோர் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். இவரது கல்வி மற்றும் ஆய்வுச் செயல்பாடுகளைப் பாராட்டும் வகையில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதும், டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் விருதும் கிடைத்திருக்கின்றன. முனைவர் ஆ.துளசேந்திரன் அவர்களது இந்நூல், இடைக்காலச் சோழர்களின் நிருவாக மேலாண்மையைத் தெரிந்துகொள்வதற்கான மிக முக்கியமான கருவி நூலாகத் திகழ்வதோடு, இன்றைய காலத்துச் சமூக மேலாண்மைக்கான வழிகாட்டி நூலாகவும் இருக்கின்றது.
